Saturday, October 31, 2009

புத்தனின் நிர்வாணம்


போதி மரத்தின் கீழ்
அன்று ஒரு நாள்
மூடிய விழிகளைத்
திறந்தான் புத்தன்.

கால்களை நனைத்தது
குருதி ஆறு
அவனது தத்துவம்
கிடந்து தவித்தது.

அதிர்ந்து,
எழுந்து ,
ஓடினான்.

காற்றாய், கடலாய்,
திசைகள் தோ்றும்.........
எங்கேயும் அவனது ஞானம்
ஒரு துளியாவது.......?

தார்மீக உலகில்
கால்கள் பதிக்க
விரும்பாத மனதுடன்
உலகை வெறுத்ததால்

போதி மரத்தில்
தூக்குப் போட்டுச்
செத்தான் புத்தன்

பரி நிர்வாணமாய் .............!

-ஹம்சத்வதனி -

No comments: