
போதி மரத்தின் கீழ்
அன்று ஒரு நாள்
மூடிய விழிகளைத்
திறந்தான் புத்தன்.
கால்களை நனைத்தது
குருதி ஆறு
அவனது தத்துவம்
கிடந்து தவித்தது.
அதிர்ந்து,
எழுந்து ,
ஓடினான்.
காற்றாய், கடலாய்,
திசைகள் தோ்றும்.........
எங்கேயும் அவனது ஞானம்
ஒரு துளியாவது.......?
தார்மீக உலகில்
கால்கள் பதிக்க
விரும்பாத மனதுடன்
உலகை வெறுத்ததால்
போதி மரத்தில்
தூக்குப் போட்டுச்
செத்தான் புத்தன்
பரி நிர்வாணமாய் .............!
-ஹம்சத்வதனி -
No comments:
Post a Comment