
சகோதர சகோதரிகளின்
பிணவாடை
காற்றில் கலந்து
கண்ணீர் வடிக்கிறது
ஈழ நிலத்தில் ........
நாற்றத்தை
மோப்பம் பிடித்துக் கொண்டே
பூங்கொத்துக் கொடுத்தார்கள்
கொத்துக் கொத்தாய்க்
கொன்றவனுக்கு!
இவர்கள்
நாடு திரும்பியதும்
சட்டென்று
நினைவிற்கு வந்தது
ஒரு கையில் மலமும்
ஒரு கையில் சோறும்
ஒரு மொழி பேசும்
இனத்தை அழித்துவிட்டு
அந்த இனம் பேசும்
மொழிக்கு மாநாடு
வாய் பேசத் தெரியாத
வரலாறு தான் வாழ்த்தும்!
சவப் பெட்டியில்
தமிழர் உரிமைகள் ........
கால் ஒடிந்த சனநாயகம்
தூக்கிப் போகிறது
இந்திய மயானத்திற்கு ...........!
நன்றி
-கவிபாஸ்கர்-
No comments:
Post a Comment